Saturday, January 29, 2011

என்னோடு நான். .

திசை மாறி பயணிக்கும் வாழ்வில்
வண்ணத்து பூச்சிகளும்
வெண்மேகங்களும் 
மழைச் சாரல்களும் 
வருடி செல்லும் தென்றல் காற்றும் 
வெண்ணிலாவும் 
சூர்யோதயங்களும்
குயிலோசைகளும் 
கவித்துவமான பொழுதுகளும் 
கடந்து தான் செல்கின்றன. . 
என்றும் உடன் வருகிறது
சப்தமற்று 
எல்லைகளற்று நீளும் வானம் !!