Thursday, April 21, 2011

இக்காலம்!!

வண்ணங்கள் யாவும் நிரம்பிய நாட்களில் 
சிறக்குகள் விரித்து கனவுகளின்றி 
கவிதைகள் பாடியத்தொரு காலம். . 
வெண்புரவியில் ஏறி ஒருவன் மெதுவாய் இதயம் திருடி 
முழுதும் அள்ளிச்  செல்வான் என
இமைகள் திறந்தே கனவுகள் கண்டு  
கவிதைகள் தீட்டியதொரு காலம். . . 
யாவும் உணர்வுக் குப்பை என்றே 
கவிதைகள் வெறுத்துக்  கழித்ததொரு காலம். . 
எது வந்த போதிலும் கரையாமலும் 
காட்டாமலும் இதயம் சேர்க்காமலும் 
பொதுவாய் புன்னகைத்து 
நொடிகளில் வாழ்வது இக்காலம்!!