Tuesday, March 8, 2011

காதல் பக்கம் !!

காதோரம் காதல் சொல் 
என்கிறாய் நீ . . . 
கனவுகள் கோர்த்து 
கவிதைகள் சேர்த்து 
இதயம் பேசிடும் மொழியில் 
நாம் செய்த காதல் 
வார்த்தைகளால் காயம் படக் கூடுமே. . 
நானே காதலாகி உன் இதயம் சேர்ந்த பின்னே 
வார்த்தைகள் தொலைந்து போயின என்கிறேன் நான். . 
புன்னகை செய்து 
கலந்து போகிறாய் கண்ணோடு. . . . . . . . .