Monday, February 14, 2011

காதல் மட்டும் . . .

உன்னவளாய் இருக்கையிலே 
உன் தாயுமாய் உணர்கிறேன். . 
தலை கோதும் விரல்களை 
நீ அழுத்தி பற்றும் நொடி 
விளக்கி விடுகிறது 
ஆயிரம் காவியங்கள் விளக்க முடியா  காதலை!!

****************************

கீதம் அகன்று வெறும் வரிகளாய் நீளும் பாடல்களும். . 

வெறும் வினாடிகளின் நீட்சியாய் நாட்களும். . .
கனவுகளற்ற மஞ்சள் வெயில் மாலையும். . .
அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாய்  கவிதைகளும். . .
உள்மனதில் ஒட்டாமல் உதட்டோடு உறவாடும் புன்னகைகளும். . 
மழை நனைத்த ஒரு வழிப் பாதையில் எண்களின் நினைவுகளும். . .
உன்னை நீங்கிவிட்ட 
என் அடையாளங்கள்!! 


*************************************

பிரிந்து போன உன் நினைவுகள் 
தினம் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றன
கனவுகளாய் அல்ல
கண்ணீராக. . 

*********************************

உன்னில் நான் 
காதலாய் இருக்கிறேன். . .
என்னில் நீ 
கவிதையாய் இருக்கிறாய். . .

************************************

பல நேரங்களில்  நாம் பேசுவதில்லை. . 
காதல் மட்டுமே பேசுகிறது. . .

*************************************

பேசாத வார்த்தைகளைக் கூட
கவிதைகளாக்கி விடுகிறாய். .  .
'என்னதான் செய்கிறாய்?' என்றால்
அப்பாவியாய் சொல்கிறாய் 
காதலைத் தவிர 
நான் ஒன்றும் செய்யவில்லை என. . 


***************************************

3 comments:

  1. பல நேரங்களில் நாம் பேசுவதில்லை. .
    காதல் மட்டுமே பேசுகிறது. . .

    பேசாத வார்த்தைகளைக் கூட
    கவிதைகளாக்கி விடுகிறாய். . .
    'என்னதான் செய்கிறாய்?' என்றால்
    அப்பாவியாய் சொல்கிறாய்
    காதலைத் தவிர
    நான் ஒன்றும் செய்யவில்லை என. .

    nice line

    ReplyDelete
  2. Awesome lines
    "பேசாத வார்த்தைகளைக் கூட
    கவிதைகளாக்கி விடுகிறாய். . .
    'என்னதான் செய்கிறாய்?' என்றால்
    அப்பாவியாய் சொல்கிறாய்
    காதலைத் தவிர
    நான் ஒன்றும் செய்யவில்லை என. ."

    ReplyDelete
  3. Your website is too good.

    பிரிந்து போன உன் நினைவுகள்
    தினம் கண்களுக்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றன
    கனவுகளாய் அல்ல
    கண்ணீராக. .
    Specially these lines are fantastic.
    Visit my blog http://sandhananila.blogspot.in/

    ReplyDelete