Wednesday, July 13, 2011

இறுதியாய் ஒரு முறை உன்னோடு வீழ்கிறேன் காதலில். . .

துவள்கிற சமயங்களில் என் தலை கோதும் விரல்களை 
அழுத்தி பிடித்துக் கொள்கிறேன் கனவிலே. . 
என்ற பழைய கவிதையின் கடைசி வரியை 
புதிதாய் ஒரு முறை குறிபேட்டில் எழுதி
இருமுறை அழுத்தமாய் அடிகோடிட்டு சாய்கையில்
உண்மையாகவே 
பக்கமாய்  நீ வருகிறாய். . 
கன்னம் வருடி 
கலைத்து போகிறாய் 
கவலைகளையும் கலக்கங்களையும்..  
இறுதியாய் ஒரு முறை 
உன்னோடு வீழ்கிறேன் காதலில். . .
நிலா!

No comments:

Post a Comment