Saturday, September 24, 2011

இன்னமும் நீ

நீ இல்லாமலும் கூட
எப்போதும் போல தான்
விடிந்து முடிகின்றன நாட்கள் . . .
எப்பொழுதும் போலவே விழிக்கிறேன்
சிரிக்கிறேன். .
ரசிக்கிறேன் . . .
சிலவற்றை கடக்கிறேன். .
எல்லாம் உணர்வு குப்பை என்றே நினைக்கிறேன். .
சில மலர்கள் பார்க்கையில்
அலைபேசி அழைக்கையில் என
எப்போதாவது நினைவுகளை புரட்டி பார்க்கிறது மனது
மற்றபடி நினைவுகள் வெறும் நினைவுகளே என்ற போதும். .
நீண்ட உறக்கத்திற்கு பின் விழித்து கொள்கையில்
மனதில் வந்து ஒட்டிக் கொள்கிற வெறுமையில்
இன்னமும் நீ இருக்கத்தான் செய்கிறாய். . . . . .

No comments:

Post a Comment